Thursday, October 26, 2023

[ 13 ] தண்ணீரே சிறந்த மருந்து.

 

தண்ணீரே சிறந்த மருந்து

 

லா வோ சூ பழங்கால சீனதேசத்தின் மாபெரும் அறிவாளி, ஞானி, தெய்வீக யோகி. அவரை எப்படி வேண்டுமானாலும் போற்றலாம். சிறந்த அரசியல் வித்தகர் என்று பெயர் பெற்றிருந்த கன்பூசியஸே அவரிடம் வாதம் செய்யாமல் ஓடிவந்து விட்டதாகவும் பேச்சு உண்டு. அவருக்கு பணிவிடை செய்ய ஏராளமான சீடர்கள் இருந்தனர்.

 

ஒருநாள் காலை தூங்கி எழுந்தது முதல் லா வோட் சூ புருவங்கள் முடிச்சுப்பட ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இப்பிடியே நெடுநேரம் போனது.சீ டர்களுக்கு பயம்; கேள்வி கேட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும் என்று பேசாமல் தம் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். இருந்தும் ஒருமணி நேரம் போனபின், பொறுக்கமுடியா சீடன் ஒருவன்,  ஐயா எழுந்திருந்து பல் தேயுங்கள் குளியுங்கள் பிற்பாடு உணவு உண்ணலாம்”, என்று கூறினான்.

 

லா வோட் சூ மெல்ல வாயை திறந்தார். “இல்லை எனக்கு ஒரு குழப்பம்”.

 

என்னது? லா வோட் சூ வுக்கே குழப்பமா? என்ன குழப்பம்? சீடர்கள் குழம்பி நின்றனர்.

 

 நேற்றிரவு நான் ஒரு பட்டாம்பூச்சியாக மாறுவதாக கனவு கண்டேன். அதிலிருந்து தான் ஒரே குழப்பம்”.

 

 இதிலென்ன குழப்பம்?”

 

 இல்லை. இப்போது லா வோட் சூ தான் பேசுவதா? அல்லது பட்டாம்பூச்சி ஒன்று லா வோட் சூவாக மாறிவிட்டதாக கனவு கண்டு அந்த கனவு இன்னும் தொடருகிறதா? இப்போது நான் யார்? லா வோட் சூவா?அல்லது பட்டாம்பூச்சியா?”

 

சீடர்களுக்கு குழப்பமோ குழப்பம். என்ன பதில் சொன்னாலும் அல்லது கேள்வி கேட்டாலும் மறுமொழி இன்னும் குழப்பத்தை அதிகரிக்கும். ஏனெனில் அவர் மகாசிறப்பு வாய்ந்த லா வோட் சூ!

 

திடீரென்று இளம் சீடன் ஒருவன் வாளி நிறைய குளிர்ந்த நீரை அவர் தலைமீது கொட்டிவிட்டு,  முழித்துக்கொள்ளுங்கள் ஐயனே”, என்று சொன்னான்.

 

உடனே அவருக்கு இன்னொருமுறை ஞானம் பிறந்தது.

 

போதனை: சிலநேரங்களில் சிறு துரும்பும் மலையைக்கூட அசைத்துவிடும்.

No comments:

Post a Comment

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...